செந்தமிழ் நாட்டிலிருந்து, சென்ற தம்பி, அலுவல்
செய்நிமித்தம், அமெரிக்கா தங்கிய எங்க தம்பி!
தந்தைதாயையும், தன்னேடழைத்த தங்கதம்பி!
சகோதரர்கள் தம்மையும், தன்னுடன் சேர்த்த அன்புத்தம்பி!
பாசத்திலும், பரிவிலும் மட்டுமின்றி உயர்ந்தோர்
பண்பிலும், நட்பிலும், நன்னெறிகளும், எம்மோடு
வாசமலராய் மணம்பரப்பிவந்தாய், இன்று தமிழகத்தின்
வழிவந்தோர் சிறப்பினுக்கு, எடுத்துக்காட்டாய் அங்கு
சீர்மிகும் வாழ்வுகண்டு, அலுவலகப்பணிகளிலும் நின்
செப்பரிய ஆர்வத்தால், ஆற்றலால், செயல்திறனால்
தேர்ச்சியுற்ற ‘நிபுணன்’ என்னும் பெருமை ஏற்று
செல்வத்திருவாம் ‘லட்சுமி’யின் கடாட்சம் பெற்று,
மாளிகையாய், அரண்மனையாய், மனையொன்று எழுப்பி
மங்கலங்கள் அணிவகுக்க, மனையாளும், பெற்றோரும், செல்வமகன்களும்
ஒளிவீசிப்பிரகாசிக்க, உடன்பிறந்தோர் வாழ்திசைக்க,
உயர் கோபுரமானாய், அன்றுவாழ், நம் நண்பர்களிடையே.
வாழ்க நீ தம்பி! வாழ்க நீடூழி! என வாழ்த்தும்
அண்ணன்கள் - காளியப்பன், இளங்கோ
தம்பியர் - மதி, கண்ணன்
அப்பா, அம்மா
Monday, April 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment